திருக்குறள்

191.

பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.

திருக்குறள் 191

பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.

பொருள்:

பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்.

மு.வரததாசனார் உரை:

கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை:

பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.